|
திருநெல்வேலி மாவட்டம் [Thirunelveli District], சுமார் 2634 சதுர.கி.மீ. பரவியுள்ளது. இதன் தலைமையகம் நெல்லை எனப்படும் திருநெல்வேலி ஆகும். இம்மாவட்டத்தின் வடக்கில் விருதுநகர் மாவட்டமும் கிழக்கில் வங்காள விரிகுடா மற்றும் தூத்துக்குடி மாவட்டமும் தெற்கில் கன்னியாகுமரி மாவட்டமும் மேற்கில் கேரள மாநிலமும் உள்ளது. இம்மாவட்டத்தில் சுமார் 35 கி.மீ. கரையோரப் பகுதியாகும். இம்மாவட்டத்தின் தனி சிறப்பு “ஐவகை நிலங்கள்” இவை அனைத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
* குறிஞ்சி - மலை * முல்லை - வனம் / காடு * மருதம் - வயல்வெளி * நெய்தல் - கடற்கரை * பாலை - பாலை நிலம் / பாலைவனம்
திருநெல்வேலி மாவட்டம் [Thirunelveli District], 1790-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. அது, தற்ப்போது உள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் சில பகுதிகளையும் கொண்டு அமைந்திருந்தது. அக்டோபர் 2008-இன் படி திருநெல்வேலி மாவட்டம் [Thirunelveli District], விழுப்புரம் மாவட்டத்திற்கு பிறகு தமிழகத்தின் இரண்டாவது பெரிய மாவட்டம் ஆகும்.
திருநெல்வேலி மாவட்டம் [Thirunelveli District], 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] இம்மாவட்டத்தில் 27,03,492 பேர் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது, அப்போது இங்கு 76.2% பேர் படித்தவர்கள், ஆனால், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] 30,72,880 பேர் உள்ளதாகவும், இதில் 15,18,595 ஆண்களும் 15,54,285 பெண்கள் உள்ளனர். இங்கு 82.9% பேர் படித்தவர்கள்.
திருநெல்வேலி மாவட்டம் [Thirunelveli District], 11 தாலூக்காகளக பிரிக்கப்பட்டுள்ளது.
* Alangulam - ஆலங்குளம் * Ambasamuthiram - அம்பாசமுத்திரம் * Nanguneri - நாங்குநேரி * Palayamkottai - பாளையங்கோட்டை * Radhapuram - இராதாபுரம் * Sankarankovil - சங்கரன்கோவில் * Shenkottai - செங்கோட்டை * Sivagiri - சிவகிரி * Thenkasi - தென்காசி * Thirunelveli - திருநெல்வேலி * Veerakeralamputhur - வீரகேரளம்புதூர்
|
|
Read more...
|